Pages

Wednesday, February 5, 2014

கற்பனையில் இவள் என்னவள் !


Below lines are from me and  edited by dad;) 
Thank you dad :) 

இருபது(+) வயதொரு இனிய நிலை -எந்தன் 
அருகினிலே ஒரு பருவச் சிலை-காதல் 
அற்புதம் படைத்திடும் அழகு கலை-அதைக் 
கற்பனை செய்திட நேரமிலை 

புன்னைகை பூத்திடும்  அழகுகினை -ஒளிப் 
பொன்னையாவும் தேவையில்லை-அந்த 
இளநகை மங்கையர்க் கனியெனவெ-அந்த 
இறைவன்  படைத்ததில் வியப்புமில்லை 

பிள்ளையின் குரலில் அவள் பேசயிலே-ஒரு 
பிள்ளையின் மழலையும் நிகரில்லை 
கொஞ்சும் மொழி தன் சொந்தமென்றால் -இனி 
எஞ்சிய மொழியிங்கு ஏதுமில்லை 

தென்றல் நடைபயின்றவள் வருகையிலே-இனி 
தேருக்கும் எதிர்வரத் துணிவில்லை 
அன்னம் தோற்கும் அழகுநடை-இனிப் 
பின்னே சொல்லிட வார்த்தையில்லை 

இத்தனை குணம்களைக் தாங்குமவள்-ஒரு 
மொத்தத்தில் உயிருள்ள அழகுச்சிலை 
சித்தம்  மயக்கிடும் சீரெழிலாள்-எந்தன் 
சிந்தையில் நிறைந்து வாழுகின்றாள்..




No comments:

Post a Comment